Wednesday 29 June 2011 | By: Menaga Sathia

எங்க ஊரு...அழகான ஊரு.. Pondicherry Spl!!


 ஸாதிகா அக்காவுக்கு மிக்க ந‌ன்றி!!

பாண்டிச்சேரி இதாங்க என் சொந்த ஊர்.2006 லிருந்து புதுச்சேரின்னு மாத்திட்டாங்க.

பிறந்து,வளர்ந்த ஊர் என்பதால் எங்க ஊரை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இப்பவும் பாண்டிச்சேரியை தாண்டி வேறு ஊருக்கு போனாலும் சொர்க்கமே என்றாலும் எங்க ஊர் போல வருமான்னு பாடல் தான் ஞாபகம் வரும்.

கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த ஊர் என்பதில் மிக பெருமை...
அப்புறம் இங்குள்ள ஒரே வசதி அனைத்து தெருக்களும் பீச் ரோட்டில் முடியும்.
ப்ரெஞ்ச் ஆதிக்கத்தின் கீழ் இருந்த மாநிலம் இது.அதனால் இன்னுக்கும் சில தெருக்களில் ப்ரெஞ்ச் பெயர்கள்தான் தெரு பெயராக இருக்கும்.கட்டிடங்களும் ப்ரெஞ்ச் முறைப்படி உயரமாகவே இருக்கும்.

எனக்கு தெரிஞ்சு இன்னிக்கு வரை எங்க ஊரில் தண்ணீர் பஞ்சமே வந்ததில்லைன்னு சொல்லுவாங்க அதற்க்கு காரணம் இங்கு சித்தர்கள் சமாதி அதிகம்.கடற்கரை பக்கத்திலயே இருப்பதால் இங்கு கடல் உணவுகள் தாராளமா கிடைக்கும்.



மொழி
ப்ரெஞ்ச்,தமிழ்,மலையாளம்,தெலுங்கு மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.பிரான்சில் நடத்தப்படும் பாடத்திட்டங்களைப்போலவே இங்கு ப்ரெஞ்ச் பள்ளிக்கூடங்களும் இருக்கு.

பார்க்க‌வேண்டிய‌ இட‌ங்கள்

புதுச்சேரி க‌ட‌ற்க‌ரை,ஆரோவில்,அர‌விந்த‌ர் ஆசிர‌ம‌ம் ( இங்கு போனாலே ம‌ன‌ம் தானாக‌வே அமைதியாகி விடும்.ரொம்ப  பிடித்த‌ இட‌ம்.ம‌ண‌க்குள‌விநாய‌க‌ர் கோவில் அருகில் இருக்கு),சுண்ணாம்பார் போட் ஹ‌வுஸ்,பார‌தி பார்க்,ரோம‌ன் ரோல‌ண்ட் லைப்ர‌ரி (மிக‌வும் புக‌ழ் பெற்ற‌ நூல‌க‌ம் இது),அருஞ்காட்சிய‌க‌ம்,பொட்ட‌னிக்க‌ல் கார்ட‌ன் (இப்போழுது இந்த‌ இட‌ம் ச‌ரியாக‌ ப‌ராம‌ரிக்க‌ப‌ட‌வில்லை.முன்பெல்லாம் இங்கு பிப்ர‌வ‌ரி மாத‌த்தில் ம‌ல‌ர்  க‌ண்காட்சி ஊட்டியிலிருந்து செடிக‌ள் வ‌ர‌வழைக்க‌ப்ப‌ட்டு ந‌ட‌க்கும்),ஆங்கிலோ‌ ப்ரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ் மில்ஸ்.

உண‌வ‌க‌ங்கள்

நிறைய வெஜ்,நான் வெஜ் ஹோட்டல்கள் இருந்தாலும் இந்த ஹோட்டல்கள் எப்போழுதும் என் பேவரிட் லிஸ்டில் இருப்பவை...
இந்திய‌ன் காபி ஹ‌வுஸ் ‍‍( எல்லா வ‌கை டிப‌ன் அயிட்ட‌ங்க‌ளும்,பில்ட‌ர் காபியும் சூப்ப‌ரா இருக்கும்.சாம்பார் இட்லி மாதிரி இந்த‌ ஹோட்ட‌லில் பூரி சாம்பார் ரொம்ப‌ பிடிக்கும்) முன்பு நேரு வீதியில் இருந்த‌து.இப்போழுது இட‌த்தை மாற்றிவிட்டார்க‌ள்.

அரிஸ்டோ ஹோட்ட‌ல் நான் வெஜ் ஐயிட்டங்கள் சூப்பரா இருக்கும்.( இங்கு பிரியாணியும்,ப‌ரோட்டா சால்னாவும் ந‌ன்றாக‌ இருக்கும்..)

ஹோட்ட‌ல் ச‌ற்குரு ( 5 ஸ்டார் ஹோட்ட‌ல்) அனைத்தும் ந‌ன்றாக‌ இருக்கும்.மிஷ‌ன் வீதியில் இருக்கும் கிளையில் இட்லி ரொம்ப‌ சூப்ப‌ரா இருக்கும்.ச‌ர்வீஸும் ந‌ல்லா இருக்கும்.)

துணி,ந‌கை க‌டைக‌ள்

ப‌ட்டுதுணிக‌ள் எடுக்க‌ புக‌ழ் பெற்ற‌ ந‌ம்பிக்கையான‌ க‌டை முத்து சில்க் ஹ‌வுஸ்.இத‌ன‌ருகில் தான் ஹோட்ட‌ல் அரிஸ்டோ இருக்கு.

த‌ங்க‌ மாளிகை ந‌கை க‌டை முன்பு ந‌ன்றாக‌ இருந்த‌து.இப்போ த‌ர‌ம் ச‌ரியில்லை.

அடுத்த‌து ஸ்ரீ ல‌ஷ்மி ஜூவ‌ல்ல‌ரி (இந்த‌ க‌டையின் ஒரு கிளை தான் பிரான்சில் இருக்கு)

ஸ்ரீ வ‌ள்ளி விலாஸ் இங்கும் ந‌கையின் த‌ர‌ம் ந‌ன்றாக‌ இருக்கும்.

புகழ்பெற்ற  ஜிப்மர்(JIPMER) மருத்துவமனையும் இங்குதான் இருக்கு...

கோவில்கள்


ஸ்ரீ ம‌ண‌க்குள‌ விநாய‌க‌ர் கோவில் மிக‌வும் புக‌ழ் பெற்ற‌ கோவில் இது.இந்தியாவிலேயே கோபுரம் முழுக்கவே தங்கத்தால் வேயப்பட்ட ஒரே விநாயகர் கோவில் இது. விநாயகர் தலங்களில் பள்ளியறை இருப்பதும் இங்கு மட்டுமே!!
இக்கோவிலின் கருவறைக் கோபுரம் தற்போது பொன்னால் வேயப்பட்டுள்ளது.
தொழில் தொடங்குவோர், புதுக்கணக்கு எழுதுவோர், திருமண பத்திரிக்கை வைத்து வழிபட விரும்புவோர், புது வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்துக்கு அதிக அளவில் வருகின்றனர். இந்துக்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் இங்கு வந்து வழிபடுவது எங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.  


மற்றும் காமாஷி அம்ம‌ன்  கோவில்,ப‌ஞ்ச‌வடி ஆஞ்ச‌நேய‌ர் கோவில்,பிர‌திய‌ங்கிராதேவி கோவில் (இங்கு சாமியை த‌ரிச‌ன‌ம் செய்ய‌ அண்ட‌ர்கிர‌வுண்டில் செல்ல‌ வேண்டும், அம்ம‌ன் சிலையும் மிக‌ பிர‌ம்மாண்டமா இருக்கும்),வேத‌புரீஸ்வ‌ர‌ர் கோவில்,சுப்ரமணிய சுவாமி கோவில்,வ‌ர‌த‌ராஜ‌ப் பெருமாள் கோவில்,செங்க‌ழுநீர‌ம்ம‌ன் கோவில் (இங்கு ஆடிமாத‌ம் 5ம் வெள்ளியில் தேர்த்திருவிழாவும்,6ஆம் வெள்ளியில் முத்துப்ப‌ல்லாக்கும் மிக‌ பிர‌ப‌ல‌மான‌ ஒன்று),சுவாமி சித்தான‌ந்த‌ர் கோவில்.

ஜூம்மா ம‌சூதி இதுவும் புக‌ழ் பெற்ற‌ ம‌சூதி.

தேவால‌ய‌ங்க‌ள்


Immaculate Conception Cathedraல்(ச‌ம்பா கோவில் என்று சொல்வாங்க‌.அன்னை தெரேசா பாண்டிச்சேரி ப‌ய‌ண‌த்தின் போது வ‌ந்துள்ளார்.),தூய‌ இருத‌ய‌ ஆண்ட‌வ‌ர் கோவில் (2007ல் தான் இந்த‌ ச‌ர்ச்சில் நூற்றாண்டு கொண்டாட‌ப்ப‌ட்ட‌து)

வில்லிய‌னூர் லூர்து மாதா கோவில் ( பாண்டிச்சேரியிலிருந்து 8 கிலோ மீட்ட‌ர் தொலைவில் இருக்கு.ப்ரான்சிலிருந்து லூர்து மாதா சிலை கொண்டு வ‌ர‌ப்ப‌ட்ட  லூர்து மாதா கோயில் இது).

இன்னும் நிறைய‌ சொல்லிக்கொண்டே போக‌லாம் எங்க‌ ஊரைப்ப‌ற்றி.....
முன்பெல்லாம் சின்ன‌ வ‌ய‌சுல‌ என் சொந்த‌ ஊர் எதுன்னு கேட்கும் போது பாண்டிச்சேரின்னு சொன்னா என்னை ஒரு மாதிரி பார்ப்பாங்க‌,என‌க்கு அப்போ எதுவும் புரிய‌ல‌.போக‌போக‌தான் புரிந்த‌து.இப்போ புரிந்திருக்குமே உங்க‌ளுக்கெல்லாம்......

படங்கள் உதவி - கூகிள்!!





Monday 27 June 2011 | By: Menaga Sathia

ஆரஞ்சு பழ ரசம்/ Orange Rasam

தே.பொருட்கள்

தக்காளி - 2 பெரியது
வேகவைத்த பருப்புதண்ணீர் - 2 கப்
மஞ்சள்தூள்,துருவிய ஆரஞ்சுத்தோல் - தலா1/4 டீஸ்பூன்
ஆரஞ்சு ஜூஸ் - 1/4 கப்
ரசப்பொடி - 1 டீஸ்பூன்
நசுக்கிய பூண்டு - 2 பல்
கொத்தமல்லிதழை - சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க

கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+தக்காளியை பொடியாக நறுக்கி போட்டு நன்கு மசிக்க வதக்கவும்.

*பின் உப்பு+வேகவைத்த பருப்புத்தண்ணீர்+ரசப்பொடி+மஞ்சள்தூள் சேர்க்கவும்.

*நுரை வரும் போது கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*ரசம் லேசாக ஆறியதும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் சேர்க்கவும்.

பி.கு
சூப் போலவும் இந்த ரசத்தை குடிக்கலாம்.இந்த ரசம் இனிப்புள்ள பழத்தில் செய்ததால் இனிப்பு சுவையுடன் இருந்தது.புளிப்பான பழத்தில் செய்தால் இன்னும் நல்லாயிருக்கும்.

Sending this Recipe To Savitha's  Orange Fruit Event.
Thursday 23 June 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் பிரியாணி/ Brinjal Biryani

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
பாஸ்மதி - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
பால்(அ)தேங்காய்ப்பால் - 3 கப்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
புதினா,கொத்தமல்லி - 1 கைப்பிடி
உப்பு+எண்ணெய் =தேவைக்கு

வறுத்து பொடிக்க
ஏலக்காய் - 3
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 4
பிரியாணி இலை - 2

செய்முறை

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.பச்சை மிளகாயை கீறவும்.கத்திரிக்காயை நீளவாக்கில் அரியவும்.

*அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.பின் நீரில்லாமல் வடித்து 1/2 டேபிள்ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்து தனியாக வைக்கவும்.

*குக்கரில் எண்ணெய்+ 1/2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு சோம்பு போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+வறுத்து பொடித்த பொடி+கத்திரிக்காய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் உப்பு+மஞ்சள்தூள்+பால்+அரிசி+எலுமிச்சை சாறு+புதினா கொத்தமல்லி சேர்த்து 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
இதற்கு உருளை வறுவல்+கேரட் அல்வா பெஸ்ட் காம்பினேஷன்.


Tuesday 21 June 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் அவல் புட்டு / Oats Aval Puttu

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1/2  கப்
அவல் - 1 /2 கப்
சர்க்கரை - 3/4 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
தேங்காய்த்துருவல் - 1/2 கப்

செய்முறை
*அவல்+ஒட்ஸை மிக்ஸியில் கரகரப்பாக பொடிக்கவும்.

*பின் உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து பிசைந்து 10 நிமிடம் வைத்திருக்கவும்.கையால் உருண்டை பிடித்தால் உதிரும் பதத்திற்க்கு இருக்கவேண்டும்.

*பின் ஆவியில் வேகவைத்து சர்க்கரை+தேங்காய்த்துறுவல்+ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து பரிமாறவும்.


Monday 20 June 2011 | By: Menaga Sathia

பாகற்காய் வறுவல் / Bittergourd Varuval

தே.பொருட்கள்:
பாகற்காய் - 1/4 கிலோ
வெங்காயம் - 1
மிளகாய்த்தூள் -1 டேபிள்ஸ்பூன்
உப்பு +எண்ணெய் = தேவைக்கு

வறுத்து பொடிக்க:
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:
*பாகற்காய்+வெங்காயத்தை நறுக்கவும்.வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை கரகரப்பாக பொடிக்கவும்.

*கடாயில் நறுக்கிய பாகற்காய்+வெங்காயம்+உப்பு+மிளகாய்த்தூள் சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து வேகவைக்கவும்.

*பாகற்காய் வெந்ததும் நன்கு சுருள கிளறி பொடித்த பொடியை தூவி இறக்கவும்.
Thursday 16 June 2011 | By: Menaga Sathia

வெந்தய ரசம் / Vendaya Rasam

தே.பொருட்கள்

புளிகரைசல் - 2 கப்
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
நசுக்கிய பூண்டுப்பல் - 3
கீறிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நருக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
கடுகு - 1/4 டீஸ்பூன்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
கரிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - சிறிது
காய்ந்த மிளகாய் - 2

செய்முறை
*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து பூண்டுப்பல்+பச்சை மிளகாய்+வெங்காயம்+தக்காளி+சேர்த்து வதக்கவும்.

*வதங்கியதும் மஞ்சள்தூள்+புளிகரைசல்+உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

*பின் மிளகுத்தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
Wednesday 15 June 2011 | By: Menaga Sathia

நூல்கோல் குருமா / Kohlrabi(German Turnip) Kurma

தே.பொருட்கள்

நூல்கோல் - 2 சிறியது
மஞ்சள்தூள் - 1 சிட்டிகை
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

எண்ணெயில் வதக்கி அரைக்க

வெங்காயம் - 1
தக்காளி - 1 சிறியது
பச்சை மிளகாய் - 3
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
கசகசா,சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்

தாளிக்க
கிராம்பு - 3
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை

*எண்ணெயில் வதக்கி அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைக்கவும்.தேங்காயுடன் சோம்பு+கசகசா மட்டும் வறுத்து நைசாக அரைக்கவும்.

*பாத்திரத்தில் நூல்கோலை தோல் சீவி துண்டுகலாகி மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து வேகவிடவும்.

*காய் வெந்ததும் வெங்காயவிழுது+தேங்காய் விழுது சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

*கடைசியாக தாளித்து சேர்க்கவும்.

Monday 13 June 2011 | By: Menaga Sathia

பரங்கிப்பேட்டை பிரியாணி / Parankipettai Biryani

ஆசியா அக்காவின் குறிப்பை பார்த்து செய்தது.மிக நன்றாக இருந்தது.நன்றி ஆசியாக்கா!!

இந்த பிரியாணிக்கு வெள்ளை மிளகு,சோம்பு,சீரகம்,ஏலம்,பட்டை ,கிராம்பு,கசகசா சேர்த்து செய்யும் பொடிதான் முக்கியமானது.இஞ்சியை விட பூண்டு அதிகமா இருக்கவேண்டும்.

இந்த பொடியை தாள்ச்சா,மட்டன் வறுவலுக்கும் பயன்படுத்தலாம்.நான் வெள்ளை மிளகுக்கு பதில் கறுப்பு மிளகுதான் பயன்படுத்தியுள்ளேன்.

தே.பொருட்கள்
பாஸ்மதி - 4 கப்
மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2 பெரியது
தக்காளி  - 2 பெரியது
இஞ்சி - 1 பெரியதுண்டு
முழுபூண்டு - 2
புதினா,கொத்தமல்லிதழை - தலா 1/2 கட்டு
பச்சை மிளகாய் - 3
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தயிர் - 125 கிராம்
எலுமிச்சைசாறு - 1 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
பட்டை - 1துண்டு
கிராம்பு - 3
ஏலககய் - 3
பிரியாணி இலை - 4

வறுத்து பொடிக்க

மிளகு - 1 டீஸ்பூன்
பட்டை - 1 சிறுதுண்டு
ஏலக்காய் - 4
கிராம்பு - 4
சோம்பு - 2 டீஸ்பூன்;
சீரகம் - 1 டீஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்

செய்முறை

*வெங்காயம்+தக்காளி நறுக்கவும்.இஞ்சி பூண்டு அரைக்கவும்.அரிசியை கழுவி 10 நிமிடம் ஊறவைக்கவும்.

*மட்டனை சுத்தம் செய்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது,தயிர் சேர்த்து குக்கரில் 3 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளை போட்டு தாளித்து வெங்காயம்+இஞ்சி பூண்டு விழுது+ வறுத்து பொடித்த பொடியில் 1 டேபிள்ஸ்பூன் சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*பின் தக்காளி+பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி+மீதமுள்ள மிளகாய்த்தூள்+வேகவைத்த கறி  சேர்த்து வதக்கவும்.

*கறிவேகவைத்த நீரை சேர்த்து 6 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

*கொதிக்கும் போது உப்பு+அரிசி சேர்த்து வேகவிடவும்.

*நீர் சுண்டி வரும் போது நெய்யை ஊற்றி 190°C முற்சூடு செய்த அவனில் 20 நிமிடம் வைத்து எடுக்கவும்.

பி.கு
எனக்கு இந்த முறையில் செய்வதுதான் நன்றாக வரும்.அவரவர் விருப்பம்போல் சாதத்தை தனியாக வடித்தும் தம் போட்டு செய்யலாம்.
Wednesday 8 June 2011 | By: Menaga Sathia

தால் மக்கானி / Dhal Makkani

தே.பொருட்கள்:

கடலைப்பருப்பு,ராஜ்மா - தலா 1/4 கப்
கறுப்பு உளுந்து - 1/4 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 1
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி+பூண்டு = சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெஷ் க்ரீம் - 1/4 கப்
உப்பு+ எண்ணெய் = தேவைக்கு

செய்முறை:

*பருப்பு வகைகளை ஒன்றாக 6 மணிநேரம் ஊறவைத்து நன்கு கழுவி உப்பு+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு + நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு வெங்காயம்+தக்காளி சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.

* பின் மிளகாய்த்தூள் + சீரகத்தூள்+சிறிதளவு ப்ரெஷ் க்ரீம் சேர்த்து நன்கு வதக்கி வேகவைத்த பருப்புகளை சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

*பரிமாறும் போது ப்ரெஷ் க்ரீம் விட்டு பரிமாறவும்.சப்பாத்தி+நாணுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.
Tuesday 7 June 2011 | By: Menaga Sathia

நீலகிரி மட்டன் குருமா / Nilgris Mutton Kurma

தே.பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 1
இஞ்சி - 1 சிறுதுண்டு
பூண்டு - 10பல்
பச்சை மிளகாய் -3
தனியாத்தூள் - 3 டீஸ்பூன்
தயிர் - 250 கிராம்
வேகவைத்த உருளைக்கிழங்கு - 2
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

அரைக்க
தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - 1 கட்டு

தாளிக்க
பட்டை - 1 துண்டு
கிராம்பு -3
பிரியாணி இலை - 2
ஏலக்காய் -3

செய்முறை

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.தயிரில் மட்டனை 1/2 மணிநேரம்  ஊறவைக்கவும்.

*வெங்காயம்+தக்காளி+ப.மிளகாய்+இஞ்சி பூண்டு இவை அனைத்தையும் தனித்தனியாக கொரகொரப்பாக அரைக்கவும்.

*குக்கரில் எண்ணெய்விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து அரைத்த வெங்காயம்+இஞ்சி பூண்டு+பச்சை மிளகாய்+தக்காளி+தனியாத்தூள்+மட்டன்+உப்பு ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*தேவையானளவு  நீர் விட்டு 3  விசில் வரை வேகவைக்கவும்.

*ப்ரெஷர் அடங்கியதும் அரைத்த தேங்காய் விழுது+உருளை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்கவைத்து இறக்கவும்.
Wednesday 1 June 2011 | By: Menaga Sathia

ரவா தோசை / Rava Dosai

 தே.பொருட்கள்
ரவை - 1 கப்
அரிசி மாவு - 3/4 கப்
மைதா - 1/4 கப்
புளித்த மோர் - 1/2 கப்
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பொடித்த மிளகு+சீரகம் - தலா 1 /2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய்(அ)நெய் = தேவைக்கு

செய்முறை
*மேற்கூறிய பொருட்களில் வெங்காயம்+எண்ணெய் தவிர அனைத்தையும் ஒன்றாக கலந்து தோசைமாவு பதத்தைவிட நீர்க்க கரைக்கவும்.

 *தோசைக்கல்லில் எண்ணெய் தடவி வெங்காயத்தை தூவி விடவும்.
 *மாவை கையால் தண்ணீர் தெளிப்பதுப்போல் இடைவெளி இல்லாமல் தெளித்து எண்ணெய்(அ)நெய் ஒரங்களில் ஊற்றவும்.
*வெந்ததும் 2ஆக மடித்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.தோசையை திருப்பி போடக்கூடாது.
01 09 10