Tuesday 5 May 2015 | By: Menaga Sathia

பகோடா வத்தல் / Pakoda Vathal | Pakoda Killu Vathal | Summer Spl


print this page PRINT IT 
 இந்த பகோடா பொரிக்கும் போது செம வாசனையாக இருக்கும்.

தயாரிக்கும் நேரம் - 20 நிமிடங்கள்
அளவு - 3 கப்

தே.பொருட்கள்
பச்சரிசி மாவு -1 கப்
நீர் -3 கப்
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் -1/2 கப்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் -2
பொடியாக நறுக்கிய இஞ்சி- 1 டீஸ்பூன்
சோம்பு -1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி- 1 கைப்பிடி
எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

செய்முறை

*குக்கரில் 3 கப் நீரை நன்கு கொதிக்கவிடவும்.

*அரிசிமாவில் சிறிது நீர்விட்டு உப்பு சேர்த்து கட்டியில்லாமல் கரைக்கவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசிமாவை ஊற்றி கைவிடாமல் கிளறவும்.

*மாவு வெந்து கெட்டியாகி கையில் ஒட்டாமல் வரும் பதத்தில் எலுமிச்சைசாறு ஊற்றி கிளறி இறக்கவும்.

*இதில் மேற்கூறிய வெங்காயம் மற்றும் மற்ற பொருட்களை சேர்த்து கிளறவும்.


*ஆறியதும் துணியில் மாவினை எடுத்து கிள்ளி வைத்து வெயிலில் காயவைத்து எடுக்கவும்.

*மறுநாள் காலையில் துணியில் பின்புறத்தில் நீர் தெளித்து வற்றல்களை எடுத்து நன்கு காயும் வரை வெயிலில் வைத்து எடுக்கவும்.

*பொரிக்கும் போது எண்ணெய் நன்கு காயவைத்து பொரித்தெடுக்கவும்.

பி.கு

*சின்ன வெங்காயம் மட்டுமே சேர்க்கவும்.பெரிய வெங்காயம் சேர்க்கும் போது சுவையில் வித்தியாசம் தெரியும்.

*அரிசிமாவுக்கு பதில் அரிசி ஊறவைத்து அரைத்தும் செய்யலாம்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

மிக அருமை.எனக்கு செய்து பார்க்க ஆசையாக இருக்கிறது.

Mullai Madavan said...

Very nicely made varthals!

01 09 10