Monday 7 September 2015 | By: Menaga Sathia

சுண்டைக்காய் சாம்பார்/SUNDAKKAI (FRESH TURKEY BERRY) SAMBAR


print this page PRINT IT
பச்சை சுண்டைக்காய் சாம்பார் நல்லா சுவையுடன் இருக்கும்,கசப்பு தெரியாது.இதில் விட்டமின் ,கால்சியம்,இரும்பு சத்து,நார்சத்து இருக்கு.இதனை சாப்பிடுவதால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்,மேலும் நரம்புகளுக்கு வலு சேர்க்கும்,பக்கவாதமும் குணமாகும்.

இதனை தொடர்ந்து 4 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுபடும்.

காய்ந்த சுண்டைக்காயினை பொரித்து சாப்பிட்டால் வாயுதொல்லை குணமாகும்.

தே.பொருட்கள்

துவரம்பருப்பு -1/4 கப்
மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்
பச்சை சுண்டைக்காய்- 1/3 கப்
புளிகரைசல்- 1/3 கப்
நருக்கிய வெங்காயம்+தக்காளி -தலா1
கீறிய பச்சை மிளகாய் -2
சாம்பார் பொடி- 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க‌
வடகம் -1/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து

செய்முறை

*சுண்டைக்காயினை கழுவி லேசாக நசுக்கிக் கொள்ளவும்.


*துவரம்பருப்பினை மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்+தக்காளிபச்சை மிளகாய்+நசுக்கிய சுண்டைக்காய் என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் வேகவைத்த பருப்பினை சேர்த்து கொதிக்கவிடவும்.


*சுண்டைக்காயினை நசுக்கி சேர்த்திருப்பதால் 5 நிமிடத்திற்கள்ளாகவே வெந்துவிடும்.

*வெந்ததும் புளிகரைசல் ஊற்றி மேலும்  சிறிது நேரம் கொதிக்கவைத்து இறக்கவும்.


*கடைசியாக தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சேர்க்கவும்.

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

great-secret-of-life said...

It is very flavourful sambar.. Perfect for hot steamed rice

Hema said...

One of my favorite sambar, super..

01 09 10